என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி-ஓசூர் சுங்கச்சாவடி பகுதியில் காரில் கடத்தப்பட்ட ரூ.96 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் -வேலூரை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது
- காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தாஜூதீன் (வயது 27), ஜாவீத் (25), ஆரூண் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் உள்ள சுங்க சாவடி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 170 கிலோ கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
ரூ.96 ஆயிரம் மதிப்பிலான அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்திவந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தாஜூதீன் (வயது 27), ஜாவீத் (25), ஆரூண் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த புகையிலை பொருட்களை பெங்களூருவிலிருந்து வேலூருக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
Next Story