search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி தி.மு.க.செயலாளர் நவாப்   அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு நகர தி.மு.க. செயலாளர் நவாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    கிருஷ்ணகிரி தி.மு.க.செயலாளர் நவாப் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    • நகர செயலாளராக நவாப் மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள்.
    • 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளராக நவாப் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதையொட்டி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு நகர தி.மு.க. செயலாளர் நவாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் தி.மு. க. நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, 5 ரோடு ரவுண்டானா அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னதாக நகர செயலாளராக நவாப் மீண்டும் தேர்ந்தெ டுக்கப்பட்டதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். மேலும், அவருக்கு நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் மதிய உணவினை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், அமீர்சுஹேல் உள்ளிட்ட வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் செயலாளர்கள், அமைப்பாளர்கள், தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×