என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டி
- போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டி மற்றும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளனர்.
- சர்வதேச அளவிலான சர்வதேச போட்டியில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை யொட்டி கடந்த 2-ம் தேதி மற்றும் 15-ம் தேதி என 2 நாட்கள் பள்ளி மாணவ, மாணவர்களுக்கிடையே செஸ் விளையாட்ட போட்டிகள் நடந்தது. அப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்துமாரி தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயம், இரண்டாம் பரிசாக ரூ.800க்கான காசோலை மற்றும் கேடயம், மூன்றாம் பரிசாக ரூ.500க்கான காசோலை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டி மற்றும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதே போல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சர்வதேச போட்டியில் பார்வையாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
மாமல்லபுரத்திற்கு செல்லவுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பெங்களூர் முதல் சென்னை வரை சென்று வர விமானம் மூலம் இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகர்மன்ற தலைவர் பரிதாநாவப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்