என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல்
- கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
- இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசுதுரை, மாவட்ட துணை தலைவர்கள் வின்சென்ட், ரமேஷ் அர்னால்டு, நகர தலைவர் முபாரக், நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், மாவட்ட பொதுச்செயலாளர் ஹரி, ஊடகப் பிரிவு தலைவர் கமலக்கண்ணன், இளைஞர் காங்கிரஸ் ஆஜீத், குருபிரசாத், நகர துணைத் தலைவர் இருதயநாதன், அமுல், மெக்கானிக் பாபு, ராஜா, சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, ஒடிசா ெரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Next Story






