search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிரடி ஆஃபர்... ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் திணறிய ஜவுளிக்கடை
    X

    அதிரடி ஆஃபர்... ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் திணறிய ஜவுளிக்கடை

    • ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது.
    • ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் அமைந்துள்ள ஒரு ஜவுளிக்கடை துவங்கி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை எனவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பல்வேறு ஆஃபர்கள் வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை பார்த்த பொதுமக்கள் காலை முதலே கடை வாசலில் குவியத் தொடங்கினர்.

    கடை திறக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பணியாளர்கள் திணறினர். பெண்கள் தங்களுக்குப் பிடித்த புடவைகளை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றனர்.

    Next Story
    ×