என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பகுதியில் வெவ்வேறு இடங்களில் மாணவி, வாலிபர் மாயம்
- பஸ் ஸ்டாண்ட் வரை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றம வாலிபர் வீடு திரும்பவில்லை.
- ஓசூர் சென்றுவிட்டு வருவதாக போன மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போலீஸ் சரகம் காந்திநகர் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் குபேரன். இவரது மகன் மகேஷ்(25). இவர் கடந்த 14-ந்தேதி அன்று பஸ் ஸ்டாண்ட் வரை செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மகேஷை தேடி வருகின்றனர்.
இதேபோல சூளகிரி அருகே உள்ள மருள தேவரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். இவரது 17 வயது மகள் கடந்த 25-ந் தேதி ஓசூர் சென்றுவிட்டு வருவதாக போனவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தரப்பட்டு உள்ளது.
Next Story






