என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனைக் கூட்டம்
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனைக் கூட்டம்

    • இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார்.
    • சபரிஷன், திருப்பதி, அருண்குமார் மற்றும் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் முன்னிலை வைத்தார். மாவட்ட செயலாளர் ஆனந்த குமார் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சம்பத், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் அர்ச்சனா, சபரிஷன், திருப்பதி, அருண்குமார் மற்றும் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கட்சியை வலுப்படுத்துவது, கிளை தோறும் கொடிக்கம்பம் ஏற்றுதல் , திண்ணை கூட்டம் நடத்துவது, வரும் டிசம்பர் மாதம் தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு பொது செயலாளர் தலைமையில் நடத்துவது மற்றும் பிப்ரவரி 4-ல் பெருந்துறையில் நடைபெறும் கொங்கு மக்கள் மாநாட்டிற்கு திரளாக கலந்து கொள்வது போன்ற கட்சி வளர்ச்சிக்கான கருத்துக்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

    Next Story
    ×