search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவி கடத்தல்
    X

    பிளஸ்-2 மாணவி கடத்தல்

    • சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமி நீண்டநேரமாகியும் காணவில்லை.
    • தனபால், ரேவதி, அவரது மகன் தமிழ்செல்வன் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்தார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது மதிக்கத்தக்க சிறுமி. அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சிறுமி நீண்டநேரமாகியும் காணவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் தாய் சசி கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் தனது மகளை கோட்டப்பட்டியை அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த தனபால், ரேவதி, அவரது மகன் தமிழ்செல்வன் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்று விட்டதாக புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 3 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து மாணவி உள்பட 4 பேரையும் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×