search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரிடம் வழிப்பறி செய்தநபருக்கு 7 ஆண்டு ெஜயில்
    X

    வாலிபரிடம் வழிப்பறி செய்தநபருக்கு 7 ஆண்டு ெஜயில்

    • கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மகபூப் அலி (47) என்பவர் வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார்.
    • இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெங்கடேஷ் (வயது 35). வெள்ளி பட்டறை தொழிலாளி.

    வழிப்பறி

    இவர் கடந்த 2019-ம் ஆணடு நவம்பர் மாதம் 7-ந்தேதி சூரமங்கலம் தரைப்பாலத்தில் நடந்து சென்றார்.

    அங்கு வந்த கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த மகபூப் அலி (47) என்பவர் வெங்கடேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்போதைய சூரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மகபூப் அலியை கைது செய்தார்.

    7 ஆண்டு ஜெயில்

    இந்த வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சேலம் தலைமை குற்றவியல் நீதிபதி கிறிஸ்டல் பபிதா நேற்று இந்த வழக்குக்கான தீர்ப்பை வழங்கினார். அதில் மகபூப் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனைவும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×