என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமராஜபுரத்தில் கிடாமுட்டு போட்டி நடந்தது.
ராமராஜபுரத்தில் கிடாமுட்டு போட்டி
- ராமராஜபுரம் கிராமத்தில் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு தி.மு.க சார்பாக கிடா முட்டு போட்டி நடைபெற்றது.
- போட்டியில் ஏராளமான கிராம இளைஞர்களின் கிடாக்கள் கொண்டுவரப்பட்டு போட்டி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமராஜபுரம் கிராமத்தில் கருணாநிதியின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு தி.மு.க சார்பாக கிடா முட்டு போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை நிலக்கோட்டை தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாயாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் ஏராளமான கிராம இளைஞர்களின் கிடாக்கள் கொண்டுவரப்பட்டு போட்டி நடைபெற்றது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
Next Story






