என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் கேரள வியாபாரிகள் வராததால் களை இழந்தது
- ஒட்டன்சத்திரத்தில் திங்கள்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது
- சந்தையில் கேரள வியாபாரிகள் வராததால் களை இழந்து காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றுவரும் கால்நடை சந்தையானது தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தையாகும்.
வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர் ,நத்தம், பழனி மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர், தேனி, பொள்ளாச்சி, காங்கேயம், மதுரை, உசிலம்பட்டி, ஈரோடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஒட்டன்சத்திரம் கால்நடைச் சந்தைக்கு வருவார்கள்.
சந்தைக்கு இதர நாட்களில் 800 முதல் ஆயிரம் வரையிலான மாடுகளும் விசேஷ நாட்களில் 1,500 முதல் 2,000 மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
தற்போது கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கேரள வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் மாடுகளை வாங்க முன்வராததால் சந்தைக்கு விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட மாடுகள் விற்பனை இன்றி மீண்டும் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை இன்று களையிழந்து காணப்பட்டது.
எதிர்பார்த்த விற்பனை நடைபெறாததால் விவசாயிகள், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்