search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் புகாரில் சிக்கிய கீரனூர் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி டிஸ்மிஸ்- டி.ஐ.ஜி. உத்தரவு
    X

    பாலியல் புகாரில் சிக்கிய கீரனூர் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி டிஸ்மிஸ்- டி.ஐ.ஜி. உத்தரவு

    • வீரகாந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டார்.
    • வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வீரகாந்தி. இவர் பணியில் இருந்தபோது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் தென்மண்டல ஐ.ஜி.க்கு புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த அப்போதைய திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரிக்கு ஐ.ஜி. உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து காவலர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியின் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா விசாரணை மேற்கொண்டார்.

    புகார் அளித்த பெண் காவலர், அவருடன் பணிபுரிந்த காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வீரகாந்தி தனது செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை பெண் காவலருக்கு அனுப்பி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வீரகாந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டார். கடந்த 2 வருடமாக பணியிடம் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார்.

    இந்நிலையில் வீரகாந்தியை டிஸ்மிஸ் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரகாந்தி திண்டுக்கல் மதுவிலக்கு மற்றும் எஸ்.பி. தனிப்படை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாலியல் புகாரில் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×