search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு-  வெள்ளப் பெருக்கில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
    X

    கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு

    கீழ்பவானி வாய்க்கால் கரை உடைப்பு- வெள்ளப் பெருக்கில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணி தீவிரம்

    • நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கின.
    • சாலைகளும் தண்ணீரால் சூழப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு்ள்ளது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் தரை தளத்தில் கசிவு நீர் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வாய்க்கால் கரையிலும் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் அதிக அளவில் வெளியேறிய வெள்ளநீரில் பாலப்பாளையம்,சின்னியம்பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், கூரபாளையம்,செங்கோடம்பாளையம் கிராமங்களில் உள்ள 100-க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மூழ்கின.

    மேலும் அந்த பகுதி சாலைகளும் தண்ணீரால் சூழப்பட்டதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு்ள்ளது. இந்நிலையில் பெருந்துறை அருகே உள்ள தனியார் துணி உற்பத்தி மில்லில் 30 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

    Next Story
    ×