என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- தவுட்டுப்பாளையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவரை சிகிச்சையில் சேர்த்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இவர் யார் ? எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? உடல் நிலை பாதித்து இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






