search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-வது வார்டு தொகுதி சபா கூட்டம்
    X

    4-வது வார்டு தொகுதி சபா கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிதொகுதி சபா கூட்டம்
    • கவுன்சிலர் ராதிகா கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

    கரூர்.

    கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 4-வது வார்டு தொகுதி சபா கூட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகில் பேரூராட்சி தலைவர் சேதுமணி, தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு 4-வது வார்டு கவுன்சிலர் ராதிகா, பகுதி சபா செயலாளர் வரி தண்டலர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம், தமிழ் ஆசிரியர் மணிகண்டன் ஆய்வக உதவியாளர் கனகராஜ் பகுதி சபா உறுப்பினர்கள் மஞ்சுளா சாந்தி ராமச்சந்திரன், பேரூராட்சி எழுத்தர் சரவணன், மஞ்சுளா, புனிதா, முன்னாள் கவுன்சிலர் கதிர்வேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கலைஞர் மகளிர் உரிமை தொகை 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அணுகு சாலை அமைத்திட வேண்டும் என்று தி.மு.க பெண் கவுன்சிலர் ராதிகா கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

    இதே போல 4-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடை மீது தரமான கான்கிரீட் மூடிகள் அமைக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உரிய மின்விளக்கு வசதி ஏற்படுத்திய தர வேண்டும் என்றும் கழிவுநீர் சாக்கடையில் பொதுமக்கள் வர்த்தகர்கள் தங்கள் குப்பைகளை அதில் கொட்டாமல் இருப்பதற்கு, பேரூராட்சி சார்பில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்திச் செல்லாமல் அரைவட்ட வடிவிலான பஸ் நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும் என்றும் சாக்கடையை நீர் குடிநீரில் கலந்து வராமல் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.அந்த கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×