search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருத்துக்கேட்பு கூட்டம்
    X

    கருத்துக்கேட்பு கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்குவாரி அமைக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது
    • க.பரமத்தி அருகே குப்பத்தில் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள குப்பம் அருகேயுள்ள கிராம பகுதியில் நான்கு கல்குவாரி அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் க.பரமத்தி அருகேயுள்ள குப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குவாரி அமைக்க ஆதரா வாளர்கள் மற்றும் எதிர்ப்போர் என பலர் கலந்து கொண்டனர். ஒரு சிலர் கல்குவாரி அமைக்க ஆதரவாக பேசினர். அதில் ஒரு சிலர் கல்குவாரி அமைப்பதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து பேசினார்.பிறகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதி வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை முதலில் அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும். கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும். ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை. ஒன்றியம் முழுவதும் சட்ட விரோதமான இயங்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருக்க அறிக்கையில் முழுமை யான விபரங்கள் போதுமானதாக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×