search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர்  மாயம்
    X

    டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் மாயம்

    கரூரில் டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் மாயமானார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் முத் தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் பிரபாகரன் (29)

    டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார் .

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது உறவினர் சகுந்தலா பசுபதிபளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×