என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
357 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
குளித்தலை:
குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம் ஊராட்சி பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மக்கள் குறைகள் குறித்து பல்வேறு மனுக்களை பெற்றனர். இதில் பெறப்பட்ட மனுக்களை தீர்வு கண்டு மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கண்காட்சி வைத்திருந்தனர். இதனை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு விழாவில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 357 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பல்வேறு துறை மாவட்ட அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், சிவாயம் ஊராட்சி தலைவர் திருமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்