என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை
    X

    எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை

    • கரூர் மாவட்டத்தில் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட் விற்றால் கடும் நடவடிக்கை
    • வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்

    கரூர்,

    கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,கரூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட்டை வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்டை குழந்தைகள் பல்துலக்கும் பேஸ்ட் என தவறாக கருதி உபயோகப்படுத்தும் அபாயம் உள்ளது.இதற்கு, எதிர்வினை மருந்து இல்லாததால் மத்திய, மாநில அரசுகள் இதனை தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்துள்ளது.எனவே மஞ்சள் பாஸ்பரன் எலி பேஸ்ட்டை (ரேட்டல்) விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்குபொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனே மாவட்ட நிர்வாகம் அல்லது அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கலாம். பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர கடை விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலிபேஸ்ட்டை விற்பனை செய்வது தெரிய வந்தால், பூச்சி மருந்து 1968ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×