என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேரன் மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி
- சேரன் மெட்ரிக் பள்ளியில் தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
- தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது
கரூர்:
கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தன்னம்பிக்கை வளர்த்தல் நிகழ்ச்சி பள்ளி அரங்கில் பள்ளியின் தாளாளர் பி.என் கருப்பண்ணன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் பி.எம்.கே பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக முன்னணி பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் கேட்கும் பொருட்களை உடனடியாக பெற்றோர்கள் வாங்கித் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். காலதாமதம் ஆகும் பட்சத்தில் எதிர்மறை எண்ணங்களை வளர்க்கின்றன. சிறிய ஏமாற்றங்கள் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே இதில் குழந்தைகளை நாம் வளர்க்கும் முறையை மாற்றி வளர்க்க வேண்டும் என்றார். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி தேவி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் ராமகிருஷ்ணபுரம் சேரன் பள்ளி, குன்னம் சத்திரம் சேரன் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்