search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் சாலை மறியல்
    X

    காலி குடங்களுடன் சாலை மறியல்

    • மேட்டு மகாதானபுரத்தில் குடிநீர் வராததை கண்டித்து பொது மக்கள் மறியல் போராட்டம்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    குளித்தலை,

    குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மகாதானபுரம் ஊராட்சி பகுதியான மகாதானபுரம் நான்காவது வார்டு பொதுமக்கள் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை ஏற்படுவதாகவும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டி பழைய ஜெயங்கொண்டம் முதல் கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் மேட்டு மகாதானபுரம் பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை தொடர்ந்து பகுதி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த லாலாபேட்டை காவல் துறையினர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது, சாலை மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,கிராமப் பகுதியில் ஏற்பட்ட சாலை மறியல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    Next Story
    ×