search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித நீர் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
    X

    புனித நீர் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

    வேலாயுதம்பாளையம்

    வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 8.15 மணிக்கு கரூர் நாமக்கல் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டது. அதில் யானை, ஒட்டகம், காளை மற்றும் குதிரைகள் பங்கேற்றன. பின் கோவிலை அடைந்த தீர்த்த குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை பக்தியுடன் வழிபட்டனர். இன்று மாலை 5 மணி முதல் நாளை அதிகாலை வரை நான்கு கால யாக பூஜைகள் நடக்கிறது. வரும் 27 காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவரும், புகலூர் நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×