search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
    X

    பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

    • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • இயற்பியல் துறை சார்பில் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சா லையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இயற்பியல் துறையில், பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக்குழு உறுப்பினரும், அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கி விழா வினை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் கள். மேலும் இயற்பியல் துறையின் சாதனைகளை ஃப்ளக்ஸ்-ல் புகைப்படமாக அச்சிட்டு பெற்றோர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட து. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினை இயற்பி யல் துறைத் தலைவர் ராஜ லிங்கம் மற்றும் பேராசிரி யர்கள் கமளீஸ்வரி, சங்கீதா, திவ்யா, பவித்ரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×