search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவர் உடல் மீட்பு
    X

    காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவர் உடல் மீட்பு

    • காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒருவர் உடல் மீட்கப்பட்டது
    • கோவிலுக்கு செல்லும் போது நேர்ந்த சம்பவம்

    கரூர்:

    திருப்பூர் மாவட்டம் கரும்பம்பாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகன்கள் வெங்கடாசலம் (வயது 22), அருணாசலம் (வயது 25). இவர்கள் தந்தையுடன் தாத்தாவிற்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்துடன் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் கிராமத்திற்கு வந்தனர். பிறகு மணப்பாறை வீராப்பூர் கோவிலுக்கு செல்வதற்காக அனைவரும் குடும்பத்துடன் சென்றனர். அப்போது குளித்தலை கடம்பனேஷ்வரர் கோவில் காவிரி ஆற்றுப் பகுதியில் குளித்துவிட்டு செல்லலாம் என்று அருணாசலம், வெங்கடாசலம் அவரது சித்தப்பா மகன் ஹரிஸ் (வயது 22) ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் நீரில் மூழ்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி 3 பேரையும் தேடினர். இதில் ஹரிஸ் நீச்சல் தெரிந்த காரணத்தால் உயிரிருடன் மீட்கப்பட்டார், வெங்கடாசலத்தினை சடலமாக மீட்டு, அருணாச்சலத்தை தேடி வந்தனர் இந் நிலையில் இன்று காலை கடம்பனேஸ்வர கோவில் காவிரி ஆற்று அருகிலேயே அருணாச்சலத்தின் உடல் ஒதுங்கி இருந்ததை பார்த்த தீயணைப்பு துறையினர் மீட்டனர். குளித்தலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×