என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி மூதாட்டி பலி
    X

    கார் மோதி மூதாட்டி பலி

    • கார் மோதி மூதாட்டி பலியானார்
    • ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது சம்பவம்

    கரூர்:

    அரவக்குறிச்சி அருகே கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். பள்ளப்பட்டியை அடுத்துள்ள சூரிப்பாளி கிராமத்தை சேர்ந்தவர் அருக்காயம்மாள் (72). இவர் அப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது கரூர், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25), என்பவர் காரில் மாம்பாறை முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு, கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரிப்பாளி பகுதியில் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருக்காயம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×