என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை
- சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது
- கடந்த ஆண்டு கரூர் அஞ்சலகங்கள் மூலம் சுமார் 19 ஆயி ரம் கொடிகள் மக்களுக்கு விநியோகிக்கபட்டது என்று தகவல்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசி யக்கொடியை வாங்கி கொள்ளலாம் என்று கரூர் அஞ்சல்கோட்ட கண் காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கரூர் அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:இந்திய சுதந்திர தினத் தை முன்னிட்டு பாரத பிரதமர் அறிவித்த இல்லந் தோறும் மூவர்ண கொடியேற்றும் திட்டம், கடந்த ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கரூர் அஞ்சலகங்கள் மூலம் சுமார் 19 ஆயி ரம் கொடிகள் மக்களுக்கு விநியோகிக்கபட்டதுஇந்த ஆண்டும் கரூர் கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக் கொடி ரூ.25 விலையில் விற்பனை செய்யப் படுகிறது. தேசியக் கொடியினை www.epostoffice. gov.in என்ற இணைய தளம் மூலமாகவும் முன் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.அவற்றை வரும் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இல்லங்களில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிட வேண்டும். இவ்வாறு ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.






