என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு நிகழ்ச்சி
- கிராமம் தோறும் நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு
- பசுமை நிறைந்த கிராமங்கள் உருவாக்க நோக்கம்
'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிரா மம்தோறும் துவங்கியுள்ளது என, கரூர் கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தும் விதமாக, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு இயக்கம் கடந்த, 1ல் துவங்கியது. வரும் 15ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதன் மூலம் பொது இடங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் மாஸ் கிளீனிங் செய்தல், பள்ளி கல்லூரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமப்புறங்களில் தனிநபர் இல்லங்களில் சுகாதாரம் பேணுவது தொடர்பாக, சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்ப டுத்துவதை ஊக்குவிக்கும் நட வடிக்கை, கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், என் குப்பை என் பொறுப்பு, என் கிராமம் தூய்மை கிராமம் என, உறு திமொழி எடுத்துக் கொண்டு செயல்படுவது. சுகாதாரமான பசுமை நிறைந்த கிராமங்களை உருவாக்குதல் போன்ற நடவு டிக்கைகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்