search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

    • தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்
    • சாலையோரத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    கரூர்

    தோகைமலை பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தோகைமலை பஸ் நிலையத்திற்கு தென்புறத்தில் சாலையோரத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மீது தேங்கி நிற்கும் மழைநீர் படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மழைநீர் செல்ல வடிகால் வசதியும், தேங்கி மழைநீரை அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்."

    Next Story
    ×