search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அழைப்பு
    X

    போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அழைப்பு

    • கரூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கவுள்ளார். அதே நேரத்தில் கரூர் மாவட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பள்ளி மற்றும் கல்லுாரிகளில் போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம்' என்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல பேரணி, கருத்தரங்கம்,துண்டு பிரசுரங்கள் விநியோகம், சமூக வலைதள தகவல்கள், விளம்பர பதாகைகள் அமைப்பது விழிப்புணர்வுஇவற்றில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    Next Story
    ×