search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பூக்களின் விலை உயர்வு
    X

    வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பூக்களின் விலை உயர்வு

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்தது
    • பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு செல்கின்றனர். வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் அந்த பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.220-முல்லைப் பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×