search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நொய்யல் பகுதியில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு
    X

    நொய்யல் பகுதியில் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு

    • நொய்யல் பகுதியில் வரத்து குறைவால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், பேசிப்பாறை, நடையனூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டியும் விற்பனை செய்து வருகின்றனர்.

    இல்லத்தரசிகள் கவலை விலை உயர்வு கடந்த வாரம் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.240 -க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.200- க்கும், ரோஜா ரூ.180-க்கும், செவ்வந்தி ரூ.170-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.340-க்கும், முல்லைப் பூ ரூ.340-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.140-க்கும் ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் விற்பனையானது. வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் ெதரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×