search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளவாபாளையத்தில் குட்கா பறிமுதல்
    X

    தளவாபாளையத்தில் குட்கா பறிமுதல்

    • தளவாபாளையத்திடில் கள்ள சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
    • குட்கா விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு குளிர்பான கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று ஆய்வு செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×