என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலக்கடலை ரூ.2.16 லட்சத்துக்கு ஏலம்
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ.2.16 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது
- போதிய லாபம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
வேலாயுதம்பாளையம்,
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்நிலக்கடலை காய் 27.78 குவிண்டால் எடை கொண்ட 85-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.35-க்கும், சராசரி விலையாக ரூ.78.30-க்கும் என ரூ 2 லட்சத்து 16ஆயிரத்து 348-க்கு விற்பனையானது.
Next Story






