search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகைவேலாயுதம்பாளையம்
    X

    தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகைவேலாயுதம்பாளையம்

    • தீயணைப்பு துறை சார்பில் நடைபெற்றது
    • பல்வேறு ஒத்திகைகள் செய்து காண்பிக்கப்பட்டது

    கரூர்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் முத்தனூரில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீயணைப் புதுறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகையை செய்து காட்டினார்கள். அப்போது தீ விபத்தில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது சமையல் அறையில்சமையல் செய்யும் போது எண்ணெய் சட்டியில் திடீரென தீப்பிடித்தால் எவ்வாறு எதை கொண்டு அணைக்க வேண்டும் என்பது குறித்தும், தீப்பிடித் துக் கொண்ட வீட்டில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது, கேஸ் சிலிண்டரில் கேஸ் லீக் ஆகி தீ பிடித்தால் எப்படி அணைப்பது, புகை சூழ்ந்த இடங்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது. அவர்களை எப்படி காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகளை செய்து காட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    Next Story
    ×