search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் இறந்த போலீஸ் குடும்பத்துக்கு நிதி உதவி
    X

    சாலை விபத்தில் இறந்த போலீஸ் குடும்பத்துக்கு நிதி உதவி

    • 5234 போலீசார் சார்பில் ரூ.16.27 லட்சம் நிதி வழங்கப்பட்டது
    • கரூர் எஸ்.பி.சுந்தரவதனம் வழங்கினார்

    கரூர்,

    சாலை விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 34) இவர், திண்டுக்கல் மாவட்டம், பழநியில், சிறப்பு காவல் படை போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம், சாலை விபத்தில், அஜித் உயிரிழந்தார். இதையடுத்து, 'காக்கும் உறவுகள்' 2017 பேட்ஜ் சார்பில், 36 மாவட்டங்களில், 5,324 போலீசார் மூலம், 16 லட்சத்து 27 ஆயிரத்து 439 ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியானது அஜித் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ். பி., சுந்தரவதனம், அஜித் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    Next Story
    ×