என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு
    X

    தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது
    • எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து இது தொடர்பாக, பாலவிடுதி போலீசில் புகார் அளித்தேன்

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை முதியவர் ஒருவர் வந்தார். கலெக்டர் அலுவலக படிக்கட்டுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த அவர், திடீரென தான் பையில் ம றைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் அங்கு பணிக்கு வந்து கொண்டிருந்த ஊழியர்கள் அவரது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரை ஆசுவாசப்படுத்தி விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகே உள்ள தூளிபட்டியை சேர்ந்த காளியப்பன் (வயது 60) என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காளியப்பன் கூறும் போது, சிலர் நபர்களின் துண்டுதலின் பேரில், என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். எங்கள் பகுதியில் உள்ள கோவிலில், மகனுக்கு திருமணம் நடத்தினேன். எனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததையடுத்து இது தொடர்பாக, பாலவிடுதி போலீசில் புகார் அளித்தேன். போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன், என்னை தாக்கியதில் படுகாயமடைந்தேன்.

    சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாலவிடுதி போலீசார், நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால், பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால் தான் தீக்குளிக்க முயன்றேன் இவ்வாறு அவர் கூறினார். பின்னர் காளியப்பனை, தான்தோன்றி மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.




    Next Story
    ×