search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடீர் மழையால் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் பாதிப்பு
    X

    திடீர் மழையால் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

    வேலாயுதம் பாளையம் பகுதியில் திடீர் மழையால் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் பாதிப்பு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், மண்மங்கலம் ,வாங்கல், என். புதூர், கடம்பங்கு றிச்சி,நொய்யல், மரவாபாளையம், தோட்டக்குறிச்சி,புகழிமலை, காகிதபுரம், மூர்த்திபா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாலை சுமார் 6.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர் .

    அதேபோல் சாலை ஓரங்களில் போடப்ப ட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்க டைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணி க்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்கா ரர்கள் மழையின் காரண மாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர் .தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது .

    கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    Next Story
    ×