என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைமைவாய்ந்த கும்பக்குழி பாலம் இடிந்து சேதம்
    X

    பழைமைவாய்ந்த கும்பக்குழி பாலம் இடிந்து சேதம்

    • பழைமைவாய்ந்த கும்பக்குழி பாலம் இடிந்து சேதம் அடைந்தது
    • மாயனூர் காவிரி கரையில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணாராயபுரம் ஒன்றியம், மாயனூர் காவிரி கரையில் கும்பக்குழி பாலம் கடந்த 1924-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக வரும் வாய்க்கால் தண்ணீரம், மாயனூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மழை பெய்து வரும் வடிகால் தண்ணீரும், இந்த கும்பக்குழி பாலத்தின் வழியாக சென்று காவிரியில் கலந்து வருகிறது. தற்போது புதிய பாலம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே உள்ள பழமையான கும்பக்குழி பாலம் வழியாகத்தான் கீழ மாயனூர், மேல மாயனூர், கட்டளை, ரங்கநாதபுரம், மேளக்கட்டளை, கீழ கட்டளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பொது மக்கள் சென்று வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதியின் வழியாக பஸ் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இதனால் பழைமைவாய்ந்த கும்பக்குழி பாலம் நாளுக்க நாள் வலுவிழுந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதில் போக்குவரத்து தடைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நீர்வள துறையினர் தற்காலிகமாக பாலத்தை சரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக பாலத்தின் கீழ் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைக்கும் பணி முடிய சுமார் 4 நாட்கள் ஆகும் என தெரிய வருகிறது. பணிகள் முடிந்தவுடன் அப்பகுதி வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், கனரக வாகனங்கள் செல்லதடை விதிக்கப்படுமு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×