என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம்
    X

    குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம்

    • நங்கவரம் பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    கரூர்

    குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சியில் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நங்கவரம் பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி சுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயலாளர் முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மஞ்சுளா கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் குழந்தை திரும ணம், பாலியல் குற்றங்கள், ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழு வதை தடுக்கும் நடவடிக்கைகள், பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் காவல்துறைக்கு ரகசிய எண்ணிற்கு போன் செய்வது மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு 1098 மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க 8903331098 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பன குறித்து பொதுமக்களிடையே எடுத் துரைக்கப்பட்டது. இதில் நங்கவரம் கிராம நிர்வாக அலுவலர்கள் வரதராஜன், வின்சென்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×