என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்வர் பிறந்தநாள் விளையாட்டு போட்டிகள்
- அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
- கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.
கரூர்,
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திரு வள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், வருகிற மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதில், கோ-கோ, கைப்பந்து, கபடி உள்ளிட்ட குழு போட்டிகள் நடக்கிறது. வரும் 4ல் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளும், வரும் 5ல் மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் நடக்கின்றன. குழு போட்டியில் சிறந்த ஐந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஐந்து வீராங்கனைகளுக்கும் அதிக புள்ளிகள் பெற்ற இரண்டு பள்ளி மற்றும் இரண்டு கல்லூரிக்கும் என மொத்தம் 14 கோப்பைகள் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழு போட்டிகள், தனிநபர் போட்டிகள் இந்த வாரமும், அடுத்த வாரமும் நடக்கின்றன மார்ச் 5ல் கரூரில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உட்பட பலர் கல
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்