என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் புதிய மின் இணைப்பு பெற அழைப்பு
    X

    கரூரில் புதிய மின் இணைப்பு பெற அழைப்பு

    • கரூரில் தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் புதிய மின் இணைப்பு பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு, பதிவு செய்துள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ், புதிய விவசாய மின் ‘இணைப்பு பெறலாம் என அறிவிப்பு

    கரூர்,

    தட்கல் சிறப்பு திட்டத்தில், புதிய விவசாய மின் இணைப்பு பெற, மின் வாரிய கோட்ட அலுவலகத்தை அணுகலாம் என, கரூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிக ளுக்கும், முன்னுரிமை அடிப்படையில், விவசாய மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு, பதிவு செய்துள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ், புதிய விவசாய மின் 'இணைப்பு பெறலாம். இதற்காக, கரூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள கரூர் நகரியம், கரூர் கிராமியம், கரூர் மற்றும் குளித்தலை கோட்டத்துக்குட்பட்ட அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×