என் மலர்
உள்ளூர் செய்திகள்

க.பரமத்தியில் மன்கிபாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு
- க.பரமத்தியில் மன்கிபாத் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யபட்டது
- இதை, நாடு முழுவதும் பா.ஜ.,வினர் ஒளிபரப்பு செய்தனர்.
கரூர்:
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மன்கிபாத் நிகழ்ச்சி, க.பரமத்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாதந்தோறும் வார கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மன்கிபாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, ரேடியோ மற்றும் 'டிவி'க் களில் பேசி வருகிறார். நேற்று 100வது, மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இதை, நாடு முழுவதும் பா.ஜ.,வினர் ஒளிபரப்பு செய்தனர். சுரூர் அருகே க.பரமத்தியில் பிரதமரின், மன்கிபாத் உரை டிவி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன், சு.பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் பழனி சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story






