என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாழைத்தார் விலை வீழ்ச்சி
- வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
- தேவை குறைந்து வருவதால்
கரூர் :
கரூர் மாவட்டத்தில் குளித்தலை, தோகைமலை, கடவூர், வேலாயு தம்பாளையம், லாலாப்பேட்டை, வாங்கல், நெரூர், மணவாசி உள் ளிட்ட பகுதிகளில், பல ஆயிரக்கணக் கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட் டுள்ளது. கடந்த மாதம் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் உள்ளிட்ட பண்டிகை சீசன் முடிவடைந்துள்ளதால், கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை குறைந்து வருகிறது. சீசன் உள்ளிட்ட காரணங்களால், வாழைத்தாருக்கு அதிக விலை கிடைத்தது. ஆனால், பருவமழை காரணமாக, தற்போது வாழைத்தா ருக்கு தேவை குறைந்துவருகிறது.
ஆயுத பூஜை பண்டிகையின் போது, 600 ரூபாய் வரை விலை போன பூவன் வாழைத்தார் நேற்று முன்தினம் 400 ரூபாயாக விலை குறைந்தது. அதேபோல், ரஸ்தாளி, கற்பூர வள்ளி, மொந்தன் உள்ளிட்ட வாழைத்தார்களும் சராசரியாக, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விலை குறைந்துள்ள.
Next Story