என் மலர்
உள்ளூர் செய்திகள்

வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு
- வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
கரூர்:
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தெலுங்கபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). இவர் மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து உள்ளது.
இந்தநிலையில் சக்திவேல் மனைவி கோவிந்தம்மாள், அவருடைய உறவினர்களான சேலத்தை சேர்ந்த திவ்யா, தங்கமணி, பெரியசாமி, ஏழுமலை, செந்தில் ஆகிய 6 பேர் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரை தகாதவார்த்தைகளால் திட்டி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பாலசுப்பிரமணியன் தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வக்கீலை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.