search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
    X

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தைகளை கல்வி பயில வேண்டிய பருவத்தில் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலும் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் குழந்தை ெதாழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

    உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் மகேஷ் (உற்பத்தி), துணை பொது மேலாளர்கள் ராதாகிருஷ்ணன் (பாதுகாப்பு), ஜெயக்குமார் (வனம்), முதுநிலை மேலாளர்கள் சிவக்குமார் (மனித வளம்), முத்துராமன் (காகித இயந்திரம்), பரமசிவம்(காகித இயந்திரம்) மற்றும் மேலாளர் வெங்கடேசன் (மனித வளம்) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து ஏற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×