என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு மின் ஆட்டோ
- அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கு மின் ஆட்டோ வழங்கப்பட்டது
- மனு செய்த ஒரே வாரத்தில் கலெக்டர் வழங்கினார்
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் பயனாளியாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மின் ஆட்டோ வழங்கினார். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, பள்ளபட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளி திருநாவுக்கரசு மின் ஆட்டோ வாங்குவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். ஒரே வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தமிழக அரசின் மானியமாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரமும், பள்ளப்பட்டி இந்தியன் வங்கி கிளை சார்பாக ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் கடன் உதவியுடன் மொத்தம் ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் மின் ஆட்டோ வழங்கப்பட்டு உள்ளது.
பின்னர் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் முதன் பயனாளியாக மாற்றுத்திறனாளி பயனாளியாக தேர்வு செய்தமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளபட்டி இந்தியன் வங்கி மேலாளர் வாலண்டினா, ஆகியோர் உடன் இருந்தனர்.






