என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
    X

    அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

    • அரியலூர் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
    • முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பங்கேற்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம்மா, மாவட்ட பொருளாளர் அன்பழகன், இளைஞரணிதுணை செயலாளர் தங்கபிச்சமுத்து, மாணவரணி சங்கர், மகளிரணி ஜீவா, இளைஞரணி சிவசங்கர், பால்சொசைட்டி சங்கதலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்றதலைவர்கள் பிரேம்குமார், செங்கமலை, சிவா, ஒன்றியசெயலாளர் செல்வராசு, பாலு, நகரசெயலாளர், செந்தில் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநில மாநாடு சிறப்பாக நடத்திட பாடுபடவேண்டும். மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி வரும் 20ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக பொறுப்பாளர்கள் அனைத்து அணிபொறுப்பாளர்களும், கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×