search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    X

    ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    • ஆசிட் குடித்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
    • கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

    கரூர்

    குளித்தலை வைகநல்லூர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்ராஜ் (வயது 54). இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ரமேஷ்ராஜ் கடந்த 7 ஆண்டுகளாக தனது தம்பி வெங்கடேஷ்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ரமேஷ்ராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் ஆசிட்டை குடித்து விட்டாராம். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரமேஷ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கடேஷ்ராஜ் ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    Next Story
    ×