என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    62 மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ,15.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ,15.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ,15.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் வழங்கினார்

    கரூர்:

    உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி கரூர் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்ற விழாவில் கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பேசியது:-

    மனு அளித்த ஒரு மணி நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கு மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்த திட்டங்களை வழங்குவதற்காக அரசிடம் கலெக்டரின் தன் விருப்புரிமை நிதிக்காக ரூ.5 ேகாடி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார். விழாவில் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×