விளைச்சல் குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு

பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர்.
விளைச்சல் குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
Published on

   வேலாயுதம் பாளையம், 

கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம், வேட்டமங்கலம் ,குந்தாணி பாளையம், நல்லி க்கோவில்,ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், புன்னம் சத்திரம், பேச்சிப்பாறை, நடையனூர், கொங்கு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.

10 மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு விளை ந்தவுடன் உள்ளூர் பகுதிக்கு வரும் புரோக்கர்கள் மூலம் மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர் .மர வள்ளிக்கிழங்குகளை வாங்கிய புரோக்கர்கள் புது ச்சத்திரம், நா மகி ரிப்பேட்டை, புதன்சந்தை, மல்லூர், கீரனூர் ,சின்ன சேலம் ,ஆத்தூர் , மல வேப்பங்கொட்டை உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் . வாங்கிய மரவள்ளி கிழங்கு களை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர் .

மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதே போல் சவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்கு களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ 12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர்.

சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒருடன்மரவள்ளிக்கிழங்கை ரூ13000 க்கு வாங்கிச் சென்றனர் .நேற்று சவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ 12 எழுநூறுக்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர். மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com